Home Agribusinessஇலங்கையின் கோழி இறைச்சி உற்பத்தித் துறையில் அரை நூற்றாண்டுகால தலைமைத்துவத்தை நிறைவு செய்யும் பைரஹா

இலங்கையின் கோழி இறைச்சி உற்பத்தித் துறையில் அரை நூற்றாண்டுகால தலைமைத்துவத்தை நிறைவு செய்யும் பைரஹா

by CeylonBusiness1
October 22, 2025 12:53 pm/**/ 0 comment

• எம். ஐ. எம். நளீம் ஹாஜியார் அவர்களால் நிறுவப்பட்ட பைரஹா, 1975 ஆம் ஆண்டில் தனியொரு பண்ணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
• பைரஹா, இலங்கையின் முதலாவது பாரிய அளவிலான, தரமான பிரொய்லர் கோழி (Broiler Chicken) உற்பத்தியாளர் ஆகும்.
• ஆரம்பத்தில் 1985 இல ; கம்பஹா மாவட்டத்திலும், பின்னர் புத்தளம், குருநாகல் மற்றும் வேறு சில மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற விவசாயிகளை வலுவூட்டுவதற்காக ‘ஒப்பந்த வளர்ப்புத் திட்டத்தை” (Contract Growing Scheme) அறிமுகப்படுத்தியது.

இலங்கையின் மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் நம்பகமான கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Bairaha Farms PLC, நாட்டின் போசாக்குத் களத்தை மறுவடிவமைப்பதில் அதன் 50 ஆண்டுகால சிறப்பையும் தலைமைத்துவத்தையும் பெருமையுடன் கொண்டாடுகிறது.

1975 ஆம் ஆண்டில் பைரஹா தனது செயற்பாடுகளை தொடங்கியபோது, இலங்கையரின் உணவு மேசையில் கோழியிறைச்சி ஒரு ஆடம்பரப் பொருளாகவே கருதப்பட்டது. ஆனால், ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர், நாட்டின் மிகவும் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் மலிவான புரத மூலமாக கோழியிறைச்சியை மாற்றுவதில் பைரஹா ஒரு கருவியாக இருந்துள்ளது. இந்த மாற்றம், தரத்தைப் பேணுவதில் நிறுவனத்தின் நீடித்த அர்ப்பணிப்பையும், உணவுத் தன்னிறைவை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தையும் ஒருங்கே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

எளிமையான பயணத்தை ஆரம்பித்த பைரஹா, தரமான கோழி பதப்படுத்தல், பாரிய அளவிலான Parent Broiler கோழி, Broiler கோழிப் பண்ணைகள் மற்றும் கோழிகளுக்கான முதலாவது எலிசா ஆய்வகம் (Eliza Laboratory) ஆகியவற்றை முன்னோடியாக நிறுவியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இது Parent Broiler கோழியின் இனப்பெருக்கத்திற்கான Grand Parent மற்றும் Parent கோழிப் பண்ணைகள், தீவன உற்பத்தி, பதப்படுத்தல் மற்றும் நாடு தழுவிய ரீதியில் கோழி உற்பத்திகளை விநியோகித்தல் எனப் பரந்து விரிந்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியிலும், நிலையான தரத்தைப் பேணவும், விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் நிறுவனத்திற்கு உதவியுள்ளது. அத்துடன், கிராமப்புற விவசாயிகளுடன் பைரஹா மேற்கொண்டு வரும் வலுவான கூட்டுமுயற்சிகள் அவர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்தவும், நாட்டின் கோழி உற்பத்தித் தளத்தை விரிவுபடுத்தவும் துணைபுரிந்துள்ளன.

banner

இது தொடர்பாக Bairaha Farms PLC, இன் முகாமைத்துவப் பணிப்பாளர் யாகூத் நளீம் கருத்து தெரிவிக்கையில், “எமது 50 ஆண்டுகால பயணம் தொடர்ச்சியான கற்றல், புத்தாக்கம் மற்றும் சூழலுக்கேற்ற இசைவாக்கம் ஆகியவற்றைக் கொண்ட பயணமாகும், மாறிவரும் நுகர்வோர் தேவைகள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மிக முக்கியமான விடயங்களில் –

அதாவது நம்பிக்கையை சம்பாதித்தல், தரத்தை பேணுதல் மற்றும் ஒவ்வொரு இலங்கை குடும்பத்திற்கும் கோழியிறைச்சி கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தப் பெறுமானங்களே பல தலைமுறைகளாக நமக்கு மென்மேலும் வலிமை சேர்க்கின்றன.” என தெரிவித்தார்.

எதிர்காலம் குறித்து கருத்துத் தெரிவித்த யாகூத் நள Pம் மேலும் கூறுகையில் “மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் போட்டி போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இலங்கையின் கோழிப் பண்னை தொழிலின் வளர்ச்சி வாய்ப்புகள் உள்நாட்டிலும் ஏற்றுமதிச் சந்தைகளிலும் வலுவாகவே உள்ளன. நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையில் பாதுகாப்பான, மலிவு விலையில் கோழியிறைச்சியைத் தொடர்ந்தும் வழங்குவதன் மூலம் நாம் பெற்றுள ;ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதே எமது முதன்மை நோக்காகும். புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை மூலம் எமது செயன்முறைகளை மேம்படுத்துவதும் எமது முன்னுரிமையாக இருக்கும்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பைரஹாவின் வரலாறு, இலங்கையின் கோழி வளர்ப்புத் துறையின் பரிணாம வளர்ச்சியுடன் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளது. இந்நிறுவனம் 1977 இல் நாட்டின் முதலாவது பெரிய அளவிலான Broiler இனப்பெருக்கப் பண்ணை மற்றும் அடைக்காக்கும் கூடத்தை நிறுவியது, அதனைத் தொடர்ந்து 1980 இல் ஒரு நவீன பதப்படுத்தும் மையத்தை அமைத்தது. 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒப்பந்த வளர்ப்புத் திட்டம்” (Contract Growing Scheme) ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இத்திட்டம் கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற விவசாயிகளை வணிக ரீதியான கோழி உற்பத்தியில் பங்கேற்கச் செய்து அவர்களை வலுவூட்டியது. இந்த முன்னோடி மாதிரி தற்போது தொழில்துறை முழுவதும் பரவலாகப் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கியது, தேசிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தியது, அத்துடன் சோளம் மற்றும் பிற தீவன உள்ள Pடுகளுக்கான தேவையை அதிகரித்து உள்ளுர் விவசாயத்தையும் ஊக்குவித்தது.

இன்று, 1,300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த விவசாயிகளின் ஆதரவுடன், பைரஹா நாடு முழுவதும் 13 இடங்களில்இயங்கி வருகிறது. இனப்பெருக்கப் பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகள் முதல் பதப்படுத்தல் மற்றும் விநியோகம் வரையான ஒவ்வொரு பிரிவும் உயர்தரம் மற்றும் செயல்பாட்டுத் தரநிலைகளை கடுமையாக பின்பற்றுகின்றன. இதன் மூலம், பைரஹா உற்பத்திகள் ஒவ்வொரு நாளும் புத்தம் புதியதாகவும் நம்பகத்தன்மையுடனும் சில்லறை விற்பனையாளர்களையும் வீட்டுப் பாவனையாளர்களையும் சென்றடைவது
உறுதிசெய்யப்படுகிறது.

தனது அடுத்த அத்தியாயத்தில் நுழையும் பைரஹா, இலங்கை குடும்பங்களின் உணவு மேசைகளில் ஒரு நம்பிக்கைக்குரிய பெயராகவும், கிராமப்புற அபிவிருத்தியின் பங்காளியாகவும் தொடர்ந்தும் திகழும். இந்நிறுவனம் தனது செயற்பாடுகளை நவீனமயமாக்குதல், ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் நிலையான பண்ணை நடைமுறைகளில் முதல Pடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், ஒரு பொறுப்புள்ள உணவு உற்பத்தியாளர் என்ற தனது பாரம்பரியத்தை வலுப்படுத்தி, ஐந்து தசாப்த கால நம்பிக்கையைப் பாதுகாத்து போசாக்கு மட்டத்தை உயர்த்துதல்
தேசிய பங்களிப்பை வலுப்படுத்தல் போன்ற பணிகளை செய்து வரும் என்ற வாக்குறுதியை நாட்டுமக்களுக்கு வழங்குவதில் மகிழ்சியடைகின்றது.

You may also like

Leave a Comment