HNB பொதுக் காப்புறுதி நிறுவனமானது இலங்கை முகாமைத்துவ நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட> 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய முகாமைத்துவ சிறப்பு விருதுகள் நிகழ்வில் காப்புறுதித் துறைக்கான தங்க வெற்றியாளராக மகுடம் சூடியுள்ளது. இவ்வங்கீகாரமானது இதனது முகாமைத்துவ நடைமுறைகளின் வளரும் முதிர்ச்சி மற்றும் அதனது உள்ளக செயற்பாட்டு மாதிரியின் வலிமை என்பவற்றை பிரதிபலிக்கும் அதேசமயம்> நிலைபேண் வளர்ச்சிக்கான நீண்டகால மூலோபாயத்தினையும் பிரதிபலிக்குமாறு> கம்பெனியின் துரிதப்படுத்தப்பட்ட பயணத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளை குறித்துநிற்கின்றது.
முகாமைத்துவ மேன்மைக்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி மேடையாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள> NMEA குறுகிய கால நிதிசார் செயற்பாடுகளை காட்டிலும் நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப்படுத்தப்படுகின்றன என்பதனையே மதிப்பாய்கின்றது. நம்பகத்தன்மை> பாரபட்சமின்மை> மற்றும் மதிப்பாய்வின் ஆழம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக விண்ணப்பங்கள் புகழ்பெற்ற நீதிபதிகளது சுயாதீன குழாமொன்றினால் கடுமையான> பல கட்ட மதிப்பாய்வுகளுக்கு உள்ளாகின்றன.
இவ்வெற்றி குறித்து கருத்துரைக்கையில் HNB பொதுக் காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திரு. சிதுமின ஜயசுந்தர அவர்கள்> ‘இத்தங்க விருதானது HNBபொதுக் காப்புறுதி நிறுவனத்தில் நாம் கடந்த சில வருடங்களாக முன்னெடுத்துச் செல்லும் நிலைமாறு பயணத்திற்கான சக்திமிக்க அங்கீகாரமாக காணப்படுகின்றது. இது தெளிவான நோக்கமொன்றுடன் மக்கள்> செயன்முறை மற்றும் செயற்பாடுகள் என்பன ஒருங்கிணையும் போது> முகாமைத்துவ மேன்மையானது இயற்கையான பெறுபேறாகும் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. மிக முக்கியமாக> நிலைபேறான வெற்றியானது உள்ளும் புறமுமமாக கட்டியெழுப்பப்படவேண்டும் எனும் எமது நம்பிக்கையை மீள வலியுறுத்துகின்றது’ என்றார்.
மேலும் குறிப்பிடுகையில்> HNB பொதுக்காப்புறுதியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி> டில்ஷhன் பெரேரா அவர்கள்> ‘எமது செயன்முறைகள்> ஆளுகை சட்டகங்கள்> மற்றும் நிறைவேற்றுத் திறன்கள் என்பவற்றால் நாம் வலுப்படுத்தியுள்ள எமது ஒழுக்கத்தினையே இவ்விருது பிரதிபலிக்கின்றது. எமது நோக்கமானது கடினமான சூழ்நிலைகளிலும் கூட> மூலோபாயத்தினை தொடர்ச்சியான செயற்பாடாக மாற்றிய நெகிழ்திறமிக்க முறைமைகளை கட்டியெழுப்புவதாகக் காணப்பட்டது. NMEA தங்க அங்கீகாரமானது எமது செயற்பாட்டு அடிப்படைகள் வலுவாகவும் எதிர்காலத்திற்கு தயாரானதாகவும் காணப்படுகின்றன என்பதனை வலியுறுத்துகின்றது’ என்றார்.
NMEA 2025 விருதுகளானது தலைமைத்துவம்> ஆளுகை> மூலோபாய நிறைவேற்றம்> புத்தாக்கம்> இடர் முகாமைத்துவம்> மற்றும் நிறுவனமய நெகிழ்திறம் என்பவற்றின் மீதான தக்க மதிப்பாய்வினைத் தொடர்ந்து தங்கம்> வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களால் வெற்றியாளர்களை கௌரவிக்கும் 15 விருது வகைப்பாடுகளை உள்ளடக்கியிருந்தது. HNBபொதுக் காப்புறுதிக்கான தங்க அங்கீகாரமானது அதனது வாடிக்கையாளர் மைய காப்புறுதி தீர்வுகள்> செயற்பாட்டு வினைத்திறன்> மற்றும் பன்முகத் தன்மைகொண்ட துறைசார் சூழலில் பொறுப்புமிக்க நிதிசார் முகாமைத்துவம் என்பவற்றிலான அதனது பலத்தினை குறித்துக்காட்டுகின்றது.
முகாமைத்துவ மேன்மைகளுக்கென தனியாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு தேசிய விருதுகள் திட்டமாக> NMEA இலங்கை முழுவதிலும் நிறுவனமய தரநியமங்களை உயர்த்துவதனில் முக்கிய வகிபாகத்தினை ஆற்றுகின்றது. IMSL–முகாமைத்துவ ஒழுங்கமைப்புகளுக்கான ஆசிய சம்மேளனத்தின் (AAMO) இலங்கைக்கான தனித்த பிரதிநிதியும் முழுநேர உறுப்பினருமான- இனால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விருதானது தேசிய மற்றும் பிராந்திய நம்பகத்தன்மைகளை வலுவாகத் தாங்கிநிற்கின்றது.
இவ்வங்கீகாரமானது HNB பொது காப்புறுதி நிறுவனமானது LMD வாடிக்கையாளர் சிறப்பு தரப்படுத்தல்களில் ‘பொதுக் காப்புறுதி’ வகைப்பாட்டில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டு> கம்பெனியை இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி வர்த்தகநாமமாக இடம்பெறச்செய்தனைத் தொடர்ந்து கிடைக்கப்பெற்றுள்ளது. இத்தரப்படுத்தலானது முகாமைத்துவ மேன்மை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் என்பவற்றுக்கிடையிலான ஒருமுகப்படுத்தலை மீளவலியுறுத்தும்விதமாக> கம்பெனியின் சேவைத் தொடர்ச்சி> டிஜிட்டல் அணுகல்> மற்றும் பெறுமதி விநியோகம் என்பவற்றிலான வலுவான வாடிக்கையாளர் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது.
கூட்டாக> இவ்வங்கீகாரங்களானவை ஒழுக்கமான தலைமைத்துவமும் செயற்பாட்டு மேன்மையும் உறுதியாகவும் பெறுமதியாகவும் மாற்றப்படுகின்ற> சிறப்பான முகாமைத்துவப்படுத்தப்பட்ட> வாடிக்கையாளர் மைய நிறுவனமாக HNB பொது காப்புறுதியின் பரிணாமத்தினை குறிக்கின்றன. இக்கணத்தில் கட்டியெழுப்பப்பட்டதாக> கம்பெனியானது நிலைபேண் வளர்ச்சி மற்றும் தேசிய பங்களிப்பிற்கான நீண்ட கால தொலைநோக்கினால் வழிப்படுத்தப்பட்டதாக> புத்தாக்கத்தினை முன்னேற்றுதல்> அதனது முகாமைத்தவ அடிப்படைகளை வலுப்படுத்தல்> மற்றும் சேவை தரநியமங்களை தொடர்ச்சியாக உயர்த்துதல் என்பவற்றில் கவனம் செலுத்துவதாகக் காணப்படும்.
