நலச்செழுமை மிக்க பாலுணவுகளுக்கு இலங்கையின் அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும், பாலுற்பத்தியை மேம்படுத்துவதில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நற்பெயரையும் சம்பாதித்துள்ள Ambewela Dairy Farm, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி, மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ திரு. கே.டி. லால்காந்த மற்றும் கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரை அண்மையில் தனது பண்ணைக்கு வரவேற்றுள்ளது. அம்பேவல பண்ணையில் இடம்பெற்று வருகின்ற விரிவான அபிவிருத்தி முயற்சிகள் குறித்து மீளாய்வு செய்து, கணிசமான மேம்பாடுகளை நோக்கி பண்ணையை வழிநடாத்தும் நோக்கில் இவ்விசேட விஜயம் இடம்பெற்றுள்ளது.

பண்ணைக்கு வருகை தந்த கௌரவ அமைச்சருக்கு Ambewela Dairy Farm முகாமைத்துவ சபை, மற்றும் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பான வரவேற்பளித்தனர். பண்ணையைச் சுற்றிப் பார்த்து, ஆராய்ந்த அமைச்சர் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்தார். இது வரை அடையப்பெற்ற முன்னேற்றங்களையும், தேசிய பொருளாதாரத்திற்கு இப்பண்ணை ஆற்றி வருகின்ற முக்கியமான பங்களிப்பு குறித்தும் அவதானித்தார்.
1943ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அம்பேவல பண்ணை, அதனைத் தொடர்ந்து 2001ம் ஆண்டில் தனியார்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அடையப்பெற்ற வளர்ச்சி மாற்றங்கள் குறித்து முகாமைத்துவ சபையினர் இவ்வருகையின் போது சுட்டிக்காட்டுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டனர். இப்பண்ணையில் இடம்பெற்று விரிவான நவீனமயமாக்கம் குறித்தும், நவீன பாலுணவுத் தயாரிப்பு மற்றும் பண்ணைத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் இலங்கையிலும், மற்றும் தெற்காசியாவின் மத்தியிலும் முன்னணி மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதையும் அவர்கள் தெளிவாக விளக்கியிருந்தனர். இலங்கையில் பாலுணவுத் துறையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி, வழங்கி வருகின்ற ஓயாத ஆதரவிற்காக கௌரவ அமைச்சருக்கும் இவ்வணி தனது நன்றிகளையும் வெளிப்படுத்தியது.
கௌரவ அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, இக்குழுமத்தின் பிரதித் தலைவர் ஸ்டஷானி ஜெயவர்த்தன மற்றும் LMF குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சசங்க பெரேரா ஆகியோர் அவருடன் ஒன்றிணைந்து உள்ளூரில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 15 மில்லியன் ரூபா பெறுமதியான 10 பசுக்கன்றுகளை நன்கொடையாக வழங்கினர். அம்பேவல பண்ணையில் வளர்க்கப்படுகின்ற அதிக பாலைத் தரும் பசு இனங்களின் கன்றுகளை உள்ளூரிலுள்ள பாற்பண்ணையாளர்களுக்கு வழங்கி உதவவேண்டும் என்பதே நோக்கம். இப்பசுக்கள் நாளொன்றுக்கு சராசரியாக 38 லீட்டர்கள் பாலைத் தருகின்றன. இப்பண்ணையில் தினந்தோறும் 65,000 லீட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2025ம் ஆண்டில் 23.5 மில்லியன் லீட்டர் வருடாந்த பால் உற்பத்தியை எட்டி, சாதனை மைற்கல்லொன்றையும் அம்பேவல பண்ணை நிலைநாட்டியிருந்தது. உயர் தரம் கொண்ட கறவைப் பசு இனங்களை வளர்த்தமை மற்றும் கால்நடைகளை நிர்வகிக்கும் அனைத்து செயற்பாடுகளும் தன்னியக்கமயமாக்கப்பட்டமை ஆகியனவே இச்சாதனைக்கு உந்துசக்தியாக மாறியது.
கௌரவ அமைச்சர் அவர்கள் தனது விஜயத்தின் போது முகாமைத்துவ அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றும் போது, “நெருக்கடி அல்லது யுத்த நிலைமைகளின் போதும் கூட எமக்கு உதவியாக அமையும் வகையில், பால் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைமையைப் போக்கி பாலுற்பத்தியில் எமது நாடு தன்னிறைவு அடைவதை உறுதி செய்ய வேண்டியது அரச மற்றும் தனியார் துறையின் கடமையாகும்.” பாலுற்பத்தித் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அரசாங்கம் உதவும் எனவும், தனியார்மயமாக்கப்பட்டதன் பின்னர் அம்பேவல பண்ணையின் வளர்ச்சியையும், இலங்கையில் இந்த மட்டத்தில் தொழிற்சாலையொன்றைக் கொண்டிருப்பதை நேரில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர்களின் விஜயம் குறித்து LMF குழுமத்தின் பிரதித் தலைவர் ஸ்டஷானி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் அரசாங்கத்தின் கௌரவ அமைச்சர்கள் இன்று இங்கு வருகை தந்து எமக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் நாட்டின் மிக முக்கியமான பாலுற்பத்தித் துறை மீதான நம்பிக்கை ஆகியவை தொடர்பில் மிகவும் வலுவான செய்தியொன்றை அவர்களுடைய வருகை வெளிப்படுத்தியுள்ளது. ஒன்றிணைந்து உழைப்பதன் மூலமாக இலங்கை மக்களுக்கு போசாக்கினை வலுப்படுத்தி, உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதில் பாற்பண்ணையாளர்களுக்கு வலுவூட்டுவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
LMF குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சசங்க பெரேரா அவர்கள் கூறுகையில், “அமைச்சர் அவர்கள் வரவேற்று, பாலுற்பத்தித் துறை குறித்து அவரிடமிருந்து விலைமதிப்பற்ற ஆலோசனையைப் பெற்று, அவருடைய தொலைநோக்கு குறித்து கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்தமை உண்மையில் ஒரு கௌரவமாகும். அவர் மிகவும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்ட ஆழமான கருத்துக்கள் எமது அபிவிருத்தி முயற்சிகளுக்கு உண்மையில் மதிப்பைச் சேர்ப்பிக்கும். பாலுற்பத்தியில் புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு Ambewela Dairy Farm ன் வளர்ச்சி சிறந்த சான்றாகும். வினைதிறன் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்பாடுகளை இயந்திரமயப்படுத்துவதற்கு நாம் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். அமைச்சர் லால் காந்த அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆதரவுடன், பேராவல் கொண்ட எமது உற்பத்தி இலக்குகளை எட்டி, இலங்கையின் விவசாயத் துறைக்கு மேலும் பங்களிப்பை வழங்குவதற்கு எமது ஆற்றல் மீது நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம்.”
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க நேரடி அனுபவத்தை வழங்கி, ஆராய்ச்சி மற்றும் அனுபவக் கல்விக்காகவும் இப்பண்ணை தனது கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. Ambewela Dairy Farm தொடர்ந்தும் கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பிரயாணிகளை ஈர்த்து வருகின்றது. இவ்வாண்டில் குறிப்பிட்ட ஒரு நாளில் மாத்திரம் 10,000 பேரை இப்பண்ணை வரவேற்றிருந்தமை அதன் பிரபலம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கின்றது. மகத்துவத்தின் மீது இப்பண்ணை கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், பாலுற்பத்தித் துறையில் அதன் முன்னிலை வகிபாகத்தையும் இம்முயற்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. இப்பண்ணையின் எதிர்கால வெற்றியையும், தேசிய பொருளாதாரத்திற்கு அதன் பங்களிப்புக்களையும் முன்னெடுத்துச் செல்வதற்கு கௌரவ அமைச்சர் லால் காந்த அவர்கள் தற்போது வழங்கி வருகின்ற ஆதரவும், மூலோபாய வழிகாட்டலும் மிக முக்கியமானவை.
