முன்னணி பல்கலைக்கழகங்கள், சுகாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய சுகாதார அமைப்புகள் ஒன்றிணைந்து, இலங்கையில் புகையிலை புகைத்தல் தடுப்பை மேம்படுத்துவதற்கான உத்திகள்” என்ற தலைப்பில் 14ம் திகதி மே மாதம் 2026 ஆண்டு அன்று, கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலின் டியூக்ஸ் கோர்ட் 2 இல் ” உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவுள்ளன.
இந்நிகழ்வு, ஆசியா முழுவதும் உள்ள எளிதில் இலக்காகக்கூடிய மக்களிடையே சுவாச நோய்களின் சுமையைக் குறைப்பதற்கும் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச முன்னெடுப்பான ‘குளோபல் ஹெல்த் ரெஸ்பியர் திட்டம்‘ (Global Health RESPIRE Project) என்பதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வு இலங்கையில் புகையிலை புகைத்தல் தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உத்திகள் மற்றும் கூட்டு அணுகுமுறைகளை முன்னிலைப்படுத்தும்.
இத்திட்டத்தை இலங்கையின் RESPIRE பங்களிப்பு நிறுவனங்களான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இரஜரட்ட பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியன பங்களிக்கவுள்ளன.
இக்கலந்துரையாடல் கௌரவ பிரதி சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி. ஹன்சக விஜேமுனி, சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை (NATA) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) உறுப்பினர்கள் மற்றும் ADIC, சர்வோதயா மற்றும் CCT உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய மேன்மைதாங்கிய குழுவொன்றை ஒன்றிணைக்கும்.
எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் மலாயா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டுத் தலைமையிலான RESPIRE என்பது பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் பங்காளர்களை உள்ளடக்கிய ஒரு பல நாட்டுக் கூட்டமைப்பாகும். இந்த முன்னெடுப்பானது ஆசியா முழுவதும் சுவாச நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறப்புகளைக் குறைப்பதற்கான குறைந்த செலவிலான அளவிடக்கூடிய கொள்கை மற்றும் மருத்துவ தலையீடுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
RESPIRE திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச வளர்ச்சி நிதியுதவியைப் பயன்படுத்தி உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் ‘சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம்‘ (NIHR) நிதியளிக்கிறது.
இந்த நிகழ்வானது கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சட்ட சமூக அமைப்புகளுக்கு இடையிலான கலந்துரையாடலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதே வேளையில் இலங்கை ஆரோக்கியமான, புகைத்தலற்ற எதிர்காலத்தை நோக்கிய கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கிறது.
