Home Healthcareலங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தனது “Pulse of Excellence” விருது வழங்கும் வைபவத்தில் 2025ம் ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடியுள்ளது

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தனது “Pulse of Excellence” விருது வழங்கும் வைபவத்தில் 2025ம் ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடியுள்ளது

by CeylonBusiness1
July 1, 2026 11:55 am/**/ 0 comment

கொழும்பு, இலங்கை – லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோர்ப்பரேஷன் பிஎல்சி,  தனது “Pulse of Excellence” பிரத்தியேக விருது வழங்கும் வைபவத்தை இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 2025ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும், சிறப்பான ஒட்டுமொத்த செயல்திறனையும் அங்கீகரித்து கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், பிரதம அரசாங்க கொறடாவுமான கௌரவ வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள் இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையை ஆற்றி, நிகழ்வைச் சிறப்பித்துள்ளார். அமைச்சர் அவர்கள் தனது உரையின் போது, நாட்டின் மீதான இந்நிறுவனத்தின் ஆழ்ந்த பங்களிப்பை எடுத்துரைத்தார்: “இந்தச் சாதனைகள் தற்போது வைத்தியசாலையின் நீண்ட பாரம்பரியத்தில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவும், நமது நாட்டின் சுகாதாரத் துறையில் அதன் முக்கிய வகிபாகத்திற்குச் சான்றாகவும் விளங்குகின்றன. உலகத் தரம் வாய்ந்த மருத்துவ நடைமுறைகள், மக்கள் மீதான உண்மையான, கருணைமிக்க அக்கறை கொண்ட சேவையே மருத்துவத்துறையில் உண்மையான மகத்துவத்தை எட்ட வழிவகுக்கின்றது என்பதை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளது.”

இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்த ஏனைய முக்கிய பிரமுகர்களில், சுகாதாரத் துறை பிரதி அமைச்சர் கௌரவ வைத்தியர் ஹன்சக விஜயமுனி மற்றும் தனியார் சுகாதாரத் துறை அபிவிருத்திப் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த தென்னக்கோன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

பல முக்கிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்ட ஒரு விரிவான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், சுகாதாரப் பராமரிப்பின் எதிர்காலத்தை சிறப்பிப்பதில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த மாலைப்பொழுது நிகழ்வு எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது. நிதி மற்றும் செயல்பாட்டுத் திறன் பிரிவில், இருதயவியல் சிகிச்சைப் பிரிவு, பேரியாட்ரிக் சத்திரசிகிச்சை, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் கதிரியக்கவியல் சிகிச்சைப் பிரிவு போன்ற துறைகள் 2025ம் ஆண்டில் சாதனை படைத்ததற்காக அங்கீகரிக்கப்பட்டன. குறிப்பாக, நரம்பியல் துறை அந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான நவீன நரம்பியல் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதற்காகப் பாராட்டப்பட்டது.

banner

மேலும், நிதி, தர நிர்ணயம், தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மகத்துவத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கையில் நுண்ணுயிரெதிர்ப்பு முகாமைத்துவத்தில் ஏனையோருக்கான முன்மாதிரியாக முதல் தனியார் வைத்தியசாலையாக உலக சுகாதார நிறுவனத்தால் இந்த வைத்தியசாலை மதிப்புமிக்க முறையில் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்தது.

இந்த வைபவத்தில் தலைமைத்துவமும், அர்ப்பணிப்பும் போற்றிக் கொண்டாடப்பட்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாழ்நாள் சேவைக்கான சிறப்பு விருது, தலைமை வைத்தியசாலைக் காப்பாளரான திரு. சுனில் கமகே அவர்களுக்கு, அவரது நீடித்த அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டது. மேலும், ஆண்டு முழுவதும் வழங்கிய மிகச்சிறந்த சேவை மற்றும் சிறப்பான நிதிப் பெறுபேறுகளைக் கௌரவிக்கும் வகையில், Lanka Hospitals Diagnostics (Pvt) Ltd நிறுவனத்திற்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அந்த மாலைப்பொழுதின் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும் வகையில், LHD நடமாடும் ஆய்வுகூட சேவை உத்தியோகபூர்வமாக, கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தலைவர் மேஜர் ஜெனரல் (வைத்தியர்) கிறிசாந்த பெர்னாண்டோ (ஓய்வுநிலை), மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் மருத்துவ சேவைகளுக்கான குழும பணிப்பாளர் வைத்தியர் சஞ்சய ரத்நாயக்க உள்ளிட்ட லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் தலைமைத்துவ அதிகாரிகளும் உரையாற்றினர். வைத்தியசாலையின் வெற்றிக்குப் பின்னால் உள்ள கூட்டு முயற்சியை வலியுறுத்தி, தலைவர் மேஜர் ஜெனரல் (வைத்தியர்) கிறிசாந்த பெர்னாண்டோ (ஓய்வுநிலை) அவர்கள், “இந்தச் சாதனை ஒரு தனிநபரின் அல்லது ஒரு துறையின் முயற்சியால் மட்டும் ஈட்டப்பட்டதல்ல, இது நமது ஒட்டுமொத்த பணியாளர்களின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பின் பலனாகும்,” என்று குறிப்பிட்டார்.

குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், குழும மருத்துவ சேவைகள் பணிப்பாளருமான வைத்தியர் சஞ்சய ரத்நாயக்க அவர்கள் இந்த சாதனைகளின் ஆழமான முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பேசுகையில்: “இந்தச் சாதனைகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. இன்று மட்டுமல்லாது என்றென்றும் நினைவுகூரப்படும். நீங்கள் செயல்பாட்டு சாதனைகளுக்காக மட்டுமல்லாது, ஒரு பரந்த சமூகத்திற்கு சிகிச்சையளித்து, அக்கறையுடன் பராமரித்து, உண்மையான ஆறுதலை அளித்த சாதனையாளர்களாகவும் இன்று அங்கீகரிக்கப்படுகிறீர்கள். இங்கு கலந்துகொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் பிரதிநிதித்துவம் மாத்திரமே. உண்மையில், உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் வாழ்வு வளம்பெற்று, மேம்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.”

விசேட அதிதிகளுக்கு விசேட வரப்பிரசாத அட்டைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கொண்டாட்ட நிகழ்வு இராப்போசன விருந்து மற்றும் நட்பு பகிர்வுடன் அந்த மாலை நிகழ்வு நிறைவடைந்தது.

You may also like

Leave a Comment