தலைமுறை தலைமுறையாக இலங்கை மக்கள் மலிபன் தயாரிப்புகளின் சுவையை நன்கு அறிவர். ஒரு முன்னோடி முயற்சியாக, இரத்மலானையைத் தாண்டி, தங்கள் அடையாளத்தின் மற்றொரு பரிச்சயமான அம்சத்தை இந்த நிறுவனம் நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது. அதுதான் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மலிபன் பிஸ்கட்டுகளின் தனித்துவமான நறுமணம்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக, மலிபன் சந்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் அப்பகுதி வழியாகப் பயணிப்பவர்களின் அன்றாட அனுபவத்தின் ஒரு பகுதியாக அந்த நறுமணம் திகழ்ந்து வந்தது. அருகிலுள்ள மலிபன் தொழிற்சாலையின் பெயரால் அழைக்கப்பட்ட அந்தச் சந்தி, புதிதாகத் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுகளின் இதமான மற்றும் மனதிற்கு இதமளிக்கும் நறுமணத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக மாறியிருந்தது. இது அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு உணர்வுபூர்வமான நினைவாக இருந்தது. ஆனால் இரத்மலானைக்கு வெளியே உள்ள பல இலங்கை மக்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்களே தவிர, நேரில் அனுபவித்ததில்லை.
LMD Readers’ Choice Most Loved Brands 2026 தரவரிசையில் முதலிடம் பிடித்த மிகவும் நேசிக்கப்படும் தயாரிப்பு வர்த்தகநாமம் (No. 1 Most Loved Product Brand) என்ற அங்கீகாரத்தைக் கொண்டாடும் வகையில், மலிபன் தனது தனித்துவமான நறுமணத்தை நாடு தழுவிய ஒரு விசேட முன்னெடுப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.
இலங்கை முழுவதும் பேரூந்து தரிப்பிடங்கள், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் பகுதிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில், மலிபனின் அந்தப் பரிச்சயமான நறுமணம் மீண்டும் உருவாக்கப்பட்டது. திரவ ஆவியாக்கிகளைப் பயன்படுத்தி, புதிதாகத் தயாரிக்கப்பட்ட மலிபன் பிஸ்கட்டுகளின் தனித்துவமான நறுமணம் நாடு முழுவதும் பரப்பப்பட்டது. கோட்டை, மாகும்புர, கண்டி, குருநாகல், காலி மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் இந்த அனுபவத்தைப் பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் பகுதிகளில், பயணிகளுக்கு மலிபனின் அந்தச் சிறப்பான நறுமணம் கலந்த பிஸ்கட் பாக்கெட்டுக்கள் வழங்கப்பட்டன. இது நறுமணம், சுவை, நினைவுகள் மற்றும் வர்த்தகநாமம் மீதான பரிச்சயம் ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு முழுமையான உணர்வுபூர்வமான அனுபவத்தை உருவாக்கியது.
இந்த முன்னெடுப்பானது, மலிபனின் தனித்துவமான மற்றும் முன்பு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே உரித்தான அடையாளங்களில் ஒன்றை, நாடு தழுவிய ஒரு பொதுவான அனுபவமாக மாற்றியது. மலிபன் சந்தியின் பரிச்சயமான நறுமணத்தை முதன்முறையாக இரத்மலானைக்கு அப்பால் கொண்டு சென்றதன் மூலம், அதன் பெயருக்காக மட்டுமல்லாமல் அதன் தனித்துவமான நறுமணத்திற்காகவும் நீண்டகாலமாக அறியப்பட்ட அந்த இடத்தின் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பை பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களுக்கு இந்த நிறுவனம் வழங்கியது.
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த மலிபன் குழுமத்தின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் போசித பெரேரா கூறியதாவது, “மலிபன் சந்தியில் புதிதாகத் தயாரிக்கப்படும் பிஸ்கட்களின் நறுமணம் பல தசாப்தங்களாக எங்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது. இது வீடு, பாடசாலை நாட்கள், தேநீர் வேளைகள், குடும்ப ஒன்றுகூடல்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாகப் பகிரப்பட்ட அன்றாடத் தருணங்கள் தொடர்பான நினைவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கையின் மிகவும் நேசிக்கப்படும் தயாரிப்பு வர்த்தகநாமமாக, இந்த பரிச்சயமான அனுபவத்தை இரத்மலானைக்கு அப்பால் கொண்டு சென்று, நாடு முழுவதும் உள்ள மக்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் விரும்பினோம்.”
இந்த நிகழ்வு, இலங்கை நுகர்வோருடன் மலிபன் கொண்டுள்ள நீண்டகால உறவையும், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகத் தரம், மாறாத தன்மை மற்றும் அக்கறை ஆகியவற்றின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையையும் கொண்டாடியது.
மலிபனின் தனித்துவமான நறுமணத்தை இலங்கை முழுவதும் கொண்டு சென்றதன் மூலம், புதிதாகத் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுகளின் வாசனையை மட்டும் இந்நிறுவனம் மீண்டும் உருவாக்கவில்லை. மாறாக, அது ஒரு பரிச்சயமான நினைவைப் பகிர்ந்துகொண்டதுடன், மலிபன் சந்தி வழங்கும் உணர்வால் ஈர்க்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள இடங்களை அன்பான மற்றும் அர்த்தமுள்ள சந்திப்பு மையங்களாக மாற்றியது.
