சம்பத் வங்கி குழுமத்தின் முழு உரிமம் பெற்ற மிகப்பெரிய நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி , 2026 ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாதங்களில் சிறப்பான நிதிசார் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான மூலோபாய வளர்ச்சி நடவடிக்கைகள், உறுதியான சொத்து தரம் மற்றும் நிலையான மதிப்பை உருவாக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலனாக இவ்வெற்றியை நிறுவனம் பெற்றுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், நிறுவனம் ரூ.1,007 மில்லியன் வரிக்கு பின்னரான இலாபத்தை ஈட்டியது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ரூ.706 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 43 சதவீத அதிகரிப்பாகும். அதேவேளை, வரிக்கு முந்தைய இலாபம் ரூ.1,689 மில்லியனிலிருந்து ரூ.2,334 மில்லியனாக உயர்ந்து, 38 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் பிரதான வணிக நடவடிக்கைகளில் சந்தையும் வாடிக்கையாளர்களும் தொடர்ந்து வெளிப்படுத்தும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சியபத பினான்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதீஷ ஹேவாவித்தாரண அவர்கள், “2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எங்களின் செயல்திறன், சியபத பினான்ஸின் தொலைநோக்கு மூலோபாயத்தையும், நிலையான வளர்ச்சிக்கான எங்களின் உறுதியான அர்ப்பணிப்பையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மொத்த சொத்துகள் ரூ.104 பில்லியனைத் தாண்டியுள்ளதோடு, சொத்து தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளோம். இது எங்களின் பிரதான வணிக நடவடிக்கைகளின் வலிமையையும், எங்கள் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. மாறிவரும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில், பொறுப்பான இடர் முகாமைத்துவத்தை முன்னெடுத்து, அனைத்து பங்குதாரர்களுக்கும் மேலதிக மதிப்பை வழங்குவதில் எங்கள் கவனம் தொடரும்.” என தெரிவித்தார்.
நிறுவனத்தின் பிரதான வணிக நடவடிக்கைகள் வலுவான வருமானத்தை தொடர்ந்து ஈட்டியுள்ளது. மொத்த வட்டி வருமானம் கடந்த ஆண்டின் ரூ.5,272 மில்லியனிலிருந்து ரூ.7,719 மில்லியனாக உயர்ந்ததன் விளைவாக, நிகர வட்டி வருமானம் ரூ.2,629 மில்லியனிலிருந்து ரூ.3,487 மில்லியனாக அதிகரித்தது. இது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை நிறுவனம் திறம்பட நிர்வகித்ததை சுட்டிக்காட்டுகிறது. ஏனைய வருமானம் ரூ.826 மில்லியனிலிருந்து ரூ.1,054 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் வருமான பல்வகைப்படுத்தல் மூலோபாயத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துகிறது. செலவு–வருமான விகிதம் 54 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக மேம்பட்டுள்ளது. இது செயற்பாட்டு திறன் மற்றும் செயல்முறை மேம்பாட்டில் நிறுவனம் தொடர்ந்து செலுத்தி வரும் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.
இக்காலப்பகுதியில் நிறுவனத்தின் சொத்து தரம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. இது சியபத பினான்ஸின் விவேகமான கடன் இடர் முகாமைத்துவம் மற்றும் முனைப்பான மீட்பு நடவடிக்கைகளின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மொத்த மூன்றாம் நிலைக் கடன் விகிதம், கடந்த ஆண்டின் 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைந்தது. அதேவேளை, நிகர மூன்றாம் நிலைக் கடன் விகிதம் 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்தது.
நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2026 ஜூன் 30ஆம் திகதியளவில் மொத்த சொத்துகள் ரூ.104 பில்லியனை எட்டி, முதல் முறையாக ரூ.100 பில்லியன் மைல்கல்லைத் தாண்டியுள்ளன. கடந்த ஆண்டு இது ரூ.74 பில்லியனாக இருந்தமை குறிப்பிடதக்கது. வட்டி விகிதங்கள் நிலையான நிலையை அடைந்ததையும், பொருளாதார மீட்சியால் பல்வேறு துறைகளில் கடன் தேவைகள் அதிகரித்ததையும் தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த கடன் வழங்கல் 44 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.99 பில்லியனாக உயர்ந்தது. நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் முக்கியக் குறியீடான வாடிக்கையாளர் வைப்புகள் ரூ.34 பில்லியனிலிருந்து ரூ.42 பில்லியனாக உயர்ந்துள்ளன. அதேவேளை, வங்கி கடன்கள் ரூ.12 பில்லியனிலிருந்து ரூ.28 பில்லியனாக உயர்ந்து, நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை மேலும் பல்வகைப்படுத்தி அதன் வேகமான வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறைத் தேவைகளை விட உயர்ந்த மூலதன மற்றும் பணப்புழக்க நிலையை சியபத பினான்ஸ் தொடர்ந்து பேணியுள்ளது. முதல் நிலை மூலதன போதியளவு விகிதம் 11.88 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது ஒழுங்குமுறையின்படி தேவைப்படும் குறைந்தபட்ச 8.50 சதவீதத்தை விட அதிகமாகும். மொத்த மூலதன போதியளவு விகிதம் 16.93 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது தேவைப்படும் குறைந்தபட்ச 12.50 சதவீதத்தை விட உயர்வாகும். தேவையான திரவச் சொத்துகளுடன் ஒப்பிடுகையில் கிடைக்கக்கூடிய திரவச் சொத்துகளின் விகிதம் 148.05 சதவீதமாக பதிவாகியுள்ளது. ஒழுங்குமுறையின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச 100 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது, இது நிறுவனத்தின் நிதி உறுதிப்பாட்டையும் எதிர்கால வளர்ச்சியை ஆதரிக்கும் திறனையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு பங்கிற்கான நிகர சொத்து மதிப்பு கடந்த ஆண்டின் ரூ.91.07 இலிருந்து ரூ.109.63 ஆக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் நாடளாவிய கிளை வலையமைப்பு கடந்த ஆண்டின் 53 கிளைகளிலிருந்து 66 கிளைகளாக விரிவடைந்துள்ளது. இது இலங்கை முழுவதும் வாடிக்கையாளர்களுக்கான சேவை அணுகலை மேம்படுத்தும் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. சம்பத் வங்கி குழுமத்தின் வலுவான ஆதரவுடன் செயல்படும் சியபத பினான்ஸ், குவைஉh சுயவiபௌ நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட தேசிய நீண்டகால தரநிலை A(lka)/Stable மதிப்பீட்டை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இது நிறுவனத்தின் உறுதியான நிதி நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.
எதிர்காலத்தை நோக்கி, ரூ.100 பில்லியனை தாண்டிய மொத்த சொத்து மைல்கல்லை அடைந்துள்ளதை 2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டினை வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் திறன்களை மேலும் வலுப்படுத்துதல், நாடளாவிய சேவை வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பொறுப்பான இடர் முகாமைத்துவ நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடித்தல் ஆகியவற்றின் மூலம், பொருளாதார மீட்சியின் வாய்ப்புகளை பயன்படுத்தி தனது பிரதான கடன் மற்றும் வைப்புத் தொழில்களை நிலையான முறையில் வளர்த்தெடுக்க சியபத பினான்ஸ் உறுதிபூண்டுள்ளது.
ஊடக தொடர்பு :
பெயர்: சம்பிகா தல்கொடபிட்டிய
பதவி: முகாமையாளர்; – பிராண்டிங் & தொடர்பாடல்
மொபைல் இலக்கம்: 0773 856 757
மின்னஞ்சல் முகவரி: [email protected]
