இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட சபை, தலைவர் கிருஷான் பாலேந்திரா தலைமையில், இன்று அதிமேதகு ஜனாதிபதியுடன் தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தியது. இந்தக் கூட்டம், வரவிருக்கும் தேசிய வரவுசெலவுத்திட்டம் 2026க்கான இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னுரிமைத் திட்டங்களை முன்வைப்பதற்கும், முந்தைய சீர்திருத்த முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் ஒரு தளத்தை வழங்கியது.

வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட சீர்திருத்தங்களுடன், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்மொழிவுகள் ஐந்து பரந்த கருப்பொருள்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டன :
• வர்த்தகம் மற்றும் முதலீட்டு வசதிகள் – தேசிய ஒற்றைச் சாளரத்தை நிறுவுதல்; சுங்கச் சட்டத்தை நவீனமயமாக்குதல்; பிரத்யேக சுதந்திர வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தல், தனியார் துறை தலைமையிலான முதலீட்டு மண்டலத்தை மேம்படுத்துதல், BOI உடன் இறக்குமதி/ஏற்றுமதி அனுமதியை எளிதாக்குவதைத் தொடர்தல் மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஏற்ப உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக்கான பெரிய முதலீடுகளுக்காக நன்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்.
• சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு – சுற்றுலாவிற்கான உலகளாவிய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தைத் தொடங்குதல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) முனைய விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்துதல்.
• டிஜிட்டல் பொருளாதாரம் & புத்தாக்கம் – கிராமப்புறத்தில் இணையச்சேவையை விரிவுபடுத்தும் அதே வேளையில், தேசிய டிஜிட்டல் ஐடி மற்றும் 5G இணையச்சேவையின் வெளியீட்டை துரிதப்படுத்துதல்.
• துறை சார்ந்த செயல்படுத்துபவர்கள் – இயந்திரமயமாக்கல் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் தரவு மைய முதலீடுகளுக்கு உகந்த சூழலை வளர்ப்பது.
• வணிகம் செய்வதை எளிதாக்குதல் சார் சீர்திருத்தம் – வணிகச் சூழல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் பொது-தனியார் கூட்டாண்மைச் சட்டத்தை செயல்படுத்துவதற்கும், பொது-தனியார் கூட்டாண்மைக்கான தேசிய நிறுவனத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு தேசிய ரீதியானதும் உடன்-தயார் நிலையில் உள்ளதுமான பணிக்குழுவை நிறுவுதல்.

முந்தைய வரவுசெலவுத்திட்டச் சமர்ப்பிப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் இலங்கை வர்த்தக சம்மேளனம் எடுத்துக்காட்டியது, 2025 தேசிய வரவுசெலவுத்திட்டத்தில் 17 திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதையும், அவற்றில் 14 திட்டங்கள் ஏற்கனவே பகுதியளவு அல்லது மேம்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுவதையும் குறிப்பிட்டது.
சீர்திருத்தங்களை முன்னோக்கி நகர்த்துவதற்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், இலங்கையை ஒரு போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் மீள் பொருளாதாரமாக நிலைநிறுத்துவதற்கும் அரசாங்கத்திற்கும் வணிகத்திற்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பு நிலவ வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிர்வாகத்தினரும் கலந்துரையாடினர். விரிவான பொதுத்துறைச் சீர்திருத்தம், கொள்முதலை நவீனமயமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் துறை பங்கேற்புக்கு அதிக வாய்ப்புகளை உறுதி செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முன்னுரிமைப் பகுதிகளை ஜனாதிபதி வலியுறுத்தினார். எரிசக்தி, சுற்றுலா மற்றும் விவசாயம் போன்ற முக்கிய துறைகளில் பொது-தனியார் கூட்டாண்மைகளை (PPPs) மேம்படுத்துவதன் மூலம் வளர்ச்சிக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி வலியுறுத்தினார். முதலீடுகளை எளிதாக்குவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட அனுமதிகள் மூலம் செயல்முறைகளை நெறிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.

வளர்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவைத்தல் மற்றும் தேசிய வளர்ச்சியை முன்னெடுப்பதில் தனியார் துறையின் பங்கை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதில், கொள்கை வகுப்பாளர்களுடன் பங்காளராக இருப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை இலங்கை வர்த்தக சம்மேளனம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
