Home CSRசுற்றுலாத்துறை யாழ்ப்பாணத்தில் இனி ஒரு கனவு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தின் அலை

சுற்றுலாத்துறை யாழ்ப்பாணத்தில் இனி ஒரு கனவு மட்டுமல்ல; அது ஒரு மாற்றத்தின் அலை

- நாம் அனைவரும் அதன் பங்குதாரர்கள்

by CeylonBusiness1
September 12, 2025 12:52 pm/**/ 0 comment

இலங்கை அதன் நெருக்கடிக்குப் பின்னரான மீட்சியில் முன்னேறி வரும் நிலையில், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சமீபத்திய மேம்பாட்டின் மூலம் இந்த பிராந்தியம் இப்போது முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக உள்ளது.

84 Tours என்பது 1984 ஆம் ஆண்டில் பிறந்த நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். இலங்கையை சர்வதேச அளவிலான சுற்றுலாத்துறையில் ஒரு கேந்திர நிலையமாக மாற்றுவதே இந்நிறுவனத்தின் பிரதானமான நோக்கமாகும்.

84 Tours நிறுவனம் அண்மையில் வட மாகாணத்தில் உள்ள சுற்றுலா சாரதிகளின் தொழில் வாண்மையை மேம்படுத்த ஒரு சமூக பொறுப்பு திட்ட (CSR) செயல்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சி கடந்த 7ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2025 ஹோட்டல் வலம்புரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

banner

அரை நாள் பயிற்சித் திட்டமானது 84 Tours நிறுவனத்தின் செயல்பாட்டு தலைமை அதிகாரியான ஹஸாம் அபூசாலி அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

தொழில்துறை வளவாளர் மற்றும் 84 Tours இன் அனுபவத் தலைமை அதிகாரியானா உஸ்மான் ஜாஃபர், இந்நிகழ்ச்சியில் பிரதான பயிற்சியாளராக செயல்பட்டார்

அவர் பின்வரும் தலைப்புகளில் கலந்துரையாடினர் –

  • நேரந்தவறாமை, சுத்தம் மற்றும் சுகாதாரம், வாகன மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் விடயங்களை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்
  • சுற்றுலா என்பது பகிர்வதும் அக்கறை காட்டுவதுமாகும் பகிர்வதன் மூலம் எல்லோரும் பயன் அடையலாம், என்பதை நினைவூட்டினார்.
  • போதைப்பொருள் பாவனையற்ற சாரதிகள் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்பவர்களில் முதன்மையானவர்கள். புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகார சபையின் ( NATA ) தேசிய ஆலோசகராக உஸ்மான் ஜாஃபர் அவர்கள் இருப்பதால், அவரது நிபுணத்துவம் இந்த நெறிப்படுத்தப்பட்ட அணுகுமுறை அமர்வை வழிநடத்துவதை எளிதாக்கியது .

“பயணம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது மனித மனதின் உணர்வுகளைப் பரிமாறும் ஒரு நெகிழ்ச்சியான தருணம் .சாரதிகளை மேம்படுத்துவது சுற்றுலாத் துறையையே மேம்படுத்துவதாகும். பயணிகளைச் சந்திக்கும் முதல் தூதுவர்கள் அவர்களே” . – உஸ்மான் ஜாஃபர்

தொழில்நுட்பத்தை சுற்றுலாவில் ஒருங்கிணைத்தல்
நஸீம் ஹசன் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வு, நவீன சுற்றுலாவில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) பங்கு குறித்து கவனம் செலுத்தியது.

அவரது பயிற்சியில் உள்ளடங்கியவை:

  • GPS செயலிகளை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசல்லகளை எப்படி தவிர்ப்பது.
  • ஹோட்டல்கள், வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் ஒருங்கிணைக்க WhatsApp போன்ற தளங்களைப் பயன்படுத்துதல்.
  • வானிலை மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகள் செயலிகள் மூலம் பயணத்தை பாதிக்கும் நிலைமைகள் குறித்து முன்கூட்டியே தகவல்களை வழங்குதல்.
  • டிஜிட்டல் கொடுப்பனவுகள் – பணமில்லா பரிமாற்றங்களை அனுமதிப்பதுடன், தொடுதலற்ற முறைகளைத் தேர்ந்தெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுதல்..

“தொழில்நுட்பம் மனித நேயத்தை மாற்றக்கூடாது, ஆனால் அதை மேம்படுத்த வேண்டும்” – நஸீம் ஹசன்

எண்ணங்கள் மற்றும் ஒத்துழைப்பு
இந்நிகழ்வு வலம்புரி விடுதியில் நடைபெற்றதுடன், தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான மதிய உணவுடன் கூடிய விருந்தும் இடம்பெற்றது.

சான்றிதழ்கள், தனித்துவமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுப் பொதிகள் மற்றும் குலுக்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பங்கேற்பாளர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப்பட்டன. றிஹான் ஓசீர் அவர்கள் பின்னணியில் உள்ள பணிகளை நிர்வகித்து, நிகழ்ச்சி சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்தார்.

பயிற்சியில் பங்கேற்ற சாரதிகளிடமிருந்து பாராட்டத்தக்க கருத்துக்களைப் பெற்றோம்.நிகழ்ச்சியின் எளிமை குறித்து அவர்கள் தங்கள் பாராட்டுகளையும் மதிப்புமிக்க கருத்துக்களையும் தெரிவித்தனர். அவர்கள் சாரதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விவாதித்து, அவர்களின் பணியின் தரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்தனர். தகவல்தொடர்புக்கு வசதியாகவும், கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ்அப் குழுவை நாங்கள் தொடர்ந்து பராமரித்து வருகிறோம.

84 TOURS நிறுவனத்தில் உங்கள் விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் சுற்றுலா பயணங்களை திட்டமிட கீழ்வரும் இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்- 0777 979 601இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடைபெற்றது. இது 84 Tours நிறுவனத்தின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

You may also like

Leave a Comment