JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, பிராந்திய மட்டத்தில் பலம் வாய்ந்த கௌரவிப்பை பதிவு செய்யும் வகையில், 10ஆவது தெற்காசிய சர்வதேச இஸ்லாமிய நிதியியல் அமர்வு (IFFSA) விருதுகள் 2025 இல் மெரிட் விருதை சுவீகரித்துள்ளது. “2024/2025 ஆண்டின் சிறந்த இஸ்லாவிய வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவன பிரிவு/அலகு” எனும் போட்டிகரமான பிரிவில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனூடாக, தெற்காசியாவில் ஜனசக்தியின் மாற்று நிதியியல் வியாபார அலகை மிகவும் போட்டிகரமான மற்றும் தொலைநோக்குடைய இஸ்லாமிய நிதிச் சேவை பிரிவாக நிலைநிறுத்தியுள்ளது. தொழிற்துறையில் வழங்கப்பட்ட கௌரவிப்புக்கு மேலதிகமாக, ஜனசக்தி பைனான்ஸ் கொண்டுள்ள நெறிமையான மற்றும் உள்ளடக்கமான நிதிப் புத்தாக்கம் எனும் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஷரிஆ விதிமுறைகளை பின்பற்றிய நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் தொலைநோக்குடன், 2021 ஆம் ஆண்டில் AFBU நிறுவப்பட்டதுடன், சகல சமூகங்களுக்கும் நெறிமுறைகளுடனான மற்றும் அசல் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டிருந்தது. நம்பிக்கை அடிப்படையிலான நிதிச் சேவைகள் மற்றும் நிஜ உலக நிதி வலுவூட்டல் ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அலகு நிறுவப்பட்டது. ஸ்தாபிக்கப்பட்டது முதல், இஸ்லாமிய நிதிக் கொள்கைகளை முறையாக பின்பற்றி, தற்கால நிதித் தேவைகளை துரிதமாக, ஈடுபாட்டுடன் மற்றும் புத்தாக்கங்களை சேர்த்து நிறைவேற்றி, இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் பிரத்தியேகமான அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ளது.
இஸ்லாமிய நிதிச் சேவைகளில் பிராந்தியத்தின் நன்மதிப்பைப் பெற்ற கட்டமைப்பான IFFSA, இல் விருது வென்றதனூடாக, நிறுவனத்திற்கு மூலோபாய மைல்கல் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, ஜனசக்தி பைனான்ஸ் பெற்றுள்ள இந்த கௌரவிப்பினூடாக, பிராந்திய மட்டத்தில் அதன் உறுதித்தன்மை மற்றும் நற்பெயரை மேம்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நிதிச் சேவைகளில் இலங்கை வெறுமனே பங்கேற்பது மட்டுமன்றி, அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிகளை வழங்குகிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகவும் இது அமைந்துள்ளது.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன்
இந்த வெற்றியின் பின்னணியில், வணிகத் திறமை மற்றும் சமூகப் பொறுப்பு இரண்டையும் பிரதிபலிக்கும் ஒரு தயாரிப்புக் குழுமம் உள்ளது. அவற்றுள், வகாலாஹ் தவணை முதலீடு என்பது வட்டி இல்லாத முதலீட்டுத் திட்டமாக அமைந்துள்ளது. இது நெறிமுறைக் கோட்பாடுகளுடன் கவர்ச்சிகரமான வருமானத்தையும் இணைக்கிறது. வாகன குத்தகை (leasing) பிரிவில், ஜனசக்தி இஜாரா, ஷரியா இணக்கமான குத்தகை மாதிரியை, தனிப்பயனாக்கப்பட்ட வாடகைத் திட்டங்கள் மற்றும் தடையற்ற சேவையுடன் வழங்குகிறது. இதற்கிடையில், ஜனசக்தி இஜாரா Tuk லீசிங் – இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடித் தீர்வாகும் – இது முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, நெகிழ்வான மற்றும் நெறிமுறையான வாகன நிதி வசதியை வழங்குகிறது. இது நிதி உள்ளடக்கத்தின் மூலம் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்தையும் சாத்தியமாக்குகிறது.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் செனல்கள் தலைமை அதிகாரி சமிந்த ரத்நாயக்க