70 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற பிஸ்கட் நாமமாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன் மெனுபக்டரீஸ் நிறுவனம், வளர்ந்து வரும் மோட்டார் பந்தய வீரரான யெவான் டேவிட் அவர்கள் 2026 FIA Formula 3 Championship பந்தயத்தில் சர்வதேச அரங்கில் போட்டியிட தயாராகி வருகின்ற நிலையில், அவருடன் கைகோர்த்துள்ளமை குறித்து அறிவித்துள்ளது.
வெறும் 18 வயதிலேயே ஆசியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற பந்தய ஓட்டுனர்களுள் ஒருவராக யெவான் அவர்கள் வளர்ந்துள்ளதுடன், ஐரோப்பாவிலுள்ள சவால்மிக்க பந்தயத் திடல்கள் பலவற்றில் போட்டியிட்டு, FIA Formula 3 Championship பந்தயத்தில் போட்டியிடவுள்ள முதலாவது இலங்கையர் என்ற வரலாற்றைப் படைக்கவுள்ளார். சர்வதேச மட்டத்தில் மோட்டார் விளையாட்டில் இலங்கையால் எதனைச் சாதிக்க முடியும் என்பதற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ள இளம் வீரர் ஒருவருக்கும். களத்திலும், பந்தயத் திடலிலும், அவற்றுக்கு அப்பாலும் இலங்கையின் இலட்சியங்களை அடைவதில் தொடர்ச்சியாக உறுதுணையாக நின்று வரும், உள்நாட்டு வர்த்தகநாமம் ஒன்றுக்கும் இடையிலான மிகச் சிறந்த கூட்டாண்மையாக இது காணப்படுகின்றது.
சிறுரக விளையாட்டு பந்தய வண்டிகளுடன் (go-karts) யெவான் அவர்களின் பந்தய வரலாறு ஆரம்பித்ததுடன், Sri Lanka Karting Circuit ல் தனது ஆரம்ப சுற்றுக்களை ஆரம்பித்த அவர், சிங்கப்பூரிலுள்ள பந்தய திடலுக்கு முன்னேறி, IAME Asia Series (X30 Cadet) மற்றும் X30 Asia Cup வெற்றி உள்ளிட்ட சர்வதேச பெறுபேறுகளை விரைவாக குவிக்க ஆரம்பித்தார். Karts பிரிவில் விற்பன்னரான அவர் அதனைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டில் UAE F4, Spanish F4 மற்றும் Eurocup-3 போட்டிகளில் தனி ஆசன மோட்டார் பந்தயத்தில் காலடியெடுத்து வைத்ததுடன், மொன்ஸாவில் தனது Euroformula பகிரங்க வார இறுதி அறிமுகத்தில் இரு தடவைகள் வெற்றியீட்டி ஐரோப்பாவில் தனது அறிமுகத்தை முத்திரை குத்தினார். அந்த உத்வேகத்தைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் Euroformula Open Rookie பட்டத்தில் பங்கேற்று, ஒட்டுமொத்தமாக இரண்டாவது ஸ்தானத்தில் அதனை நிறைவு செய்ததுடன், சர்வதேச அரங்கில் மிளிரும் இலங்கையின் வளர்ந்து வரும் திறமைசாலி என்ற அந்தஸ்தை ஆணித்தரமாக நிலைநாட்டினார்.
இக்கூட்டாண்மை குறித்து யெவான் டேவிட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
“மலிபனுடன் கைகோர்ப்பதென்பது என்னைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிறுவனம் தலைமுறை தலைமுறையாக இலங்கையில் விளையாட்டுக்களுக்கு ஆதரவளித்து வந்துள்ளதுடன், நான் எனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் சமயத்தில் எனக்கு அவர்கள் உறுதுணையளிப்பது விசேட உணர்வை எனக்குள் ஏற்படுத்துகின்றது. என்னைப் போலவே எமது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புக்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள வர்த்தகநாமம் ஒன்றுடன் இணைந்து, எமது தேசியக் கொடியை சர்வதேச அரங்கில் உயரே பறக்கச் செய்வதில் நான் பெருமை கொள்கின்றேன்.”
மலிபன் நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவன தொடர்பாடல்களுக்கான குழும தலைமை அதிகாரி போசித பெரேரா அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து வெளியிடுகையில்:
“யெவான் அவர்களின் வரலாறு, மலிபன் நிறுவனத்திற்கும் வெகுவாகப் பொருந்தக்கூடிய இலட்சியம், ஒழுக்கம், மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. தமக்குப் பரிச்சயமான களங்களுக்கும் அப்பால் சென்று, சர்வதேச அரங்கில் போட்டியிடும் தைரியம் கொண்ட இலங்கை மக்களுக்கு 70 ஆண்டுகளாக நாம் உறுதுணையாக நின்றுள்ளோம். யெவான் அவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையப்போகும் இத்தருணத்தில் அவருடன் கைகோர்ப்பது என்பது வெறுமனே மோட்டார் பந்தயம் என்பதற்கும் அப்பாற்பட்டது. சர்வதேச அரங்கில் நிலைநாட்டக்கூடிய சாத்தியத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, தன்னம்பிக்கை மற்றும் நோக்கத்துடன் எமது தேசத்தின் வரலாற்றை முன்னெடுத்துச் செல்லவுள்ள இளம் இலங்கை வீரர் ஒருவருக்கு உறுதுணை நிற்கும் மகத்துவத்தைக் குறித்து நிற்கின்றது.”
கடந்த காலங்களில் இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் ஒவ்வொரு மட்ட போட்டிகளுக்கும் இவ்வர்த்தகநாமம் உறுதுணையளித்து வந்துள்ளது. சர்வதேச அரங்கில் 85 கிலோ எடைக்குட்பட்ட நியூசிலாந்து ரக்பி அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கு ஆதரவளித்தும், பாடசாலை மட்டத்தில் ஹொக்கி விளையாட்டுக்கு வலுவூட்டியும், 19 வயதிற்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு துணை நின்றும், 20 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ரக்பி அணிகளுக்கு ஆதரவளித்தும், ஆசிய தகுதிகாண் ரக்பி போட்டிகளில் இலங்கை ரக்பி அணியை வழிநடாத்தியும், 2025/2026 பருவகால கழகங்களுக்கு இடையிலான ரக்பி சுற்றுப்போட்டி மற்றும் கிளிஃபேர்ட் கிண்ண நொக்அவுட் வெற்றிக்கிண்ணம் ஆகியவற்றுக்கு வலுவூட்டியும் பல்வேறு வழிகளில் பக்கபலமாகச் செயற்பட்டுள்ளது. விளையாட்டின் மூலமாக வாய்ப்புக்கள், தன்னம்பிக்கை, மற்றும் தேசத்தின் பெருமையைக் கட்டியெழுப்புவதன் மீதான நீண்ட கால அர்ப்பணிப்பை இந்த தொடர்ச்சியான முதலீடு பிரதிபலிக்கின்றது.
மலிபன் வழங்க முன்வந்துள்ள ஆதரவின் மூலமாக FIA Formula 3 சுற்றுக்கான யெவானின் பயணம் தனிப்பட்ட ஒருவரின் சாதனை என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக மாறியுள்ளதுடன், நம்பிக்கை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கான தேசிய வெளிப்பாடாக மாறியுள்ளது. 2026ம் ஆண்டில் யெவான் அவர்கள் போட்டியிடவுள்ள ஒவ்வொரு திக்கிலும், ஒவ்வொரு சுற்றிலும், மற்றும் ஒவ்வொரு முடிவுப் புள்ளியிலும் மலிபனும், யெவானும் இணைந்து இலங்கைக் கொடியை உயரே பறக்கச் செய்வர்.
