Home Art & ExhibitionPFEC Global கொழும்பில் ஏற்பாடு செய்த சர்வதேச கல்விக் கண்காட்சி 2026

PFEC Global கொழும்பில் ஏற்பாடு செய்த சர்வதேச கல்விக் கண்காட்சி 2026

by CeylonBusiness1
February 2, 2026 1:07 pm/**/ 0 comment

PFEC Global ஏற்பாட்டில் 2026 ஜனவரி 31 அன்று கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற சர்வதேச கல்விக் கண்காட்சி 2026 (World Study Fair 2026) நிகழ்வில் வெளிநாட்டு கல்வி வாய்ப்புக்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ள மாணவர்கள், பெற்றோர், மற்றும் தொழில் புரிபவர்கள் என பெருந்திரளானோர் பங்குபற்றியுள்ளனர். தற்போது இரண்டாவது முறையாகவும் இக்கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் சர்வதேச கல்வி வாய்ப்புக்கள் குறித்த ஈடுபாடுகளை வளர்க்கும் முக்கியமான நிகழ்வாக தொடர்ந்தும் பிரபலமடைந்து வருகின்றது. 

கலதாரி ஹோட்டலின் கிரான்ட் போல்றூம் நிகழ்வு மண்டபத்தில் மு.ப 11.00 முதல் பி.ப 5.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து, ஐரோப்பா, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து உயர் கல்வி நிறுவனங்கள் பலவும் பங்குபற்றின. வெளிநாடுகளில் கல்வியைத் தொடர்வதில் அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்பு, மற்றும் தொழில்சார் தகைமை கற்கைநெறிகள் குறித்து ஆராய்வதற்கும் இக்கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியதுடன், அனுமதிகளுக்கான தேவைப்பாடுகள், புலமைப்பரிசில்கள், மற்றும் படிப்பை முடித்த பின் கிடைக்கும் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை வழிகாட்டல் குறித்த தெளிவையும் பெற்றுக்கொண்டனர். 

 2006ம் ஆண்டில் இயங்க ஆரம்பித்த PFEC Global என்ற சர்வதேச கல்வி ஆலோசனை வழங்கல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கண்காட்சி, நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான வழிகாட்டல் மூலமாக சர்வதேச கல்வியைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளை மேம்படுத்துவதில் நிறுவனம் தற்போது கவனம் செலுத்தி வருவதை சிறப்பாகப் பிரதிபலித்துள்ளது. மெல்பேர்ண் மாநகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள PFEC Global, கொழும்பு, சிட்னி, அடிலயிட், பேர்த், டாக்கா, சட்டகிராம், அஹமதபாத் அடங்கலாக. அவுஸ்திரேலியா மற்றும் தெற்காசியாவில் 11 அலுவலகங்களை இயக்கி வருகின்றது. சர்வதேசரீதியாக 550 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இது செயற்பட்டு வருவதுடன், சர்வதேச நாடுகளில் கல்வியை மேற்கொள்வதற்கு 22,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவியுள்ளது.     சர்வதேச கல்விக் கண்காட்சி 2026 நிகழ்வில் பங்குபற்றியவர்கள் பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு உரையாடுவதற்கு வாய்ப்புக் கிட்டியமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு எத்துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறித்த இலவச மதிப்பீடுகளை அவர்கள் பெற்றுக்கொண்துடன், கிடைக்கின்ற கற்கைநெறிகள், அவற்றில் இணைவதற்கு தேவையான தகுதி, புலமைப்பரிசில் வாய்ப்புக்கள், மற்றும் கல்வியை முடித்த பின்னர் வேலைவாய்ப்புக்களுக்கான வழிமுறைகள் குறித்த விரிவான விபரங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர். தகைமை கொண்ட மாணவர்களுக்கு அதே இடத்திலேயே அனுமதி வாய்ப்புக்களுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், விண்ணப்பங்களை மேற்கொள்வதை விரைவுபடுத்துவதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன. வீசா நடைமுறைகள், தங்குமிடம் தொடர்பான தெரிவுகள், வெளிநாட்டு மருத்துவக் காப்புறுதி, மற்றும் நீண்ட கால கல்விக்கான திட்டமிடல் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகள் PFEC Global ஆலோசகர்களால் வழங்கப்பட்டன. 

“சர்வதேச கல்விக் கண்காட்சியின் மூலமாக ஒரே இடத்திலேயே வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான பாதையை தெளிவுபடுத்தி, மாணவர்களும், பெற்றோர்களும் நடைமுறைச் சாத்தியங்களை விளங்கி, பல்கலைக்கழக பிரதிநிதிகளை அவர்கள் நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்புடன், திட்டமிடப்பட்ட வழிகாட்டலை வழங்குவதே எமது நோக்கம்,” என்று PFEC Global இலங்கைக் கிளையின் தலைமை அதிகாரியான நவ்தீப் கார் அவர்கள் குறிப்பிட்டார். “இம்முறை தமது கல்வியில் மற்றும் தொழிலில் பல்வேறு நிலைமட்டங்களிலுள்ள மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டமையை எம்மால் காணக்கூடியதாக இருந்ததுடன், மாணவர்கள் தமது தகைமை குறித்த மதிப்பீடுகளை இங்கு பெற்று, அதே இடத்திலேயே பல்கலைக்கழக அனுமதி வாய்ப்புக்களுக்கான கடிதங்களை பெற்று வெளிநாடுகளில் கல்வி கற்கும் ஆவல் கொண்ட பலரும் ஒட்டுமொத்த நடைமுறையை விரைவுபடுத்தியுள்ளனர். சரியான கற்கைநெறியை தெரிவு செய்வது முதல், தேவைப்பாடுகள், காலக்கெடுக்கள், மற்றும் நீண்ட கால பலாபலன்கள் ஆகியவற்றை விளங்கிக் கொள்வது வரை ஒட்டுமொத்த ஆதரவை மாணவர்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதே எமது நோக்கம்.” 

banner

இந்நிகழ்வு குறித்த விசேட சலுகைகள் இக்கண்காட்சியின் போது வழங்கப்பட்டன. 150 க்கும் மேற்பட்ட சர்வதேச கல்வி நிறுவனங்களை எட்டுவதற்கான வாய்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் கட்டணத்திற்கு முழுமையான தள்ளுபடி ஆகியனவும் அவற்றில் அடங்கியிருந்தன. வெளிநாடுகளில் கல்வி கற்கும் போது ஏற்படும் செலவுகளின் சுமையைக் குறைப்பதற்காக, 30 சதவீதம் வரை மலேசியன் எயார்லைன்ஸ் விமானசேவை பிரயாண டிக்கெட்டுக்கான தள்ளுபடிகள் மற்றும் 45 கிலோ வரை அதிகரிக்கப்பட்ட பயணப்பொதி போன்ற பிரயாணம் தொடர்புபட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

பெருந்திரளானோர் பங்குபற்றி, நடைமுறைக்கு ஏற்ற பலன்களைப் பெற்றுக்கொண்டுள்ள PFEC Global நிறுவனத்தின் சர்வதேச கல்விக் கண்காட்சி 2026 நிகழ்வு, வெளிநாட்டில் கல்வியை முன்னெடுப்பதில் சிறப்பாக திட்டமிடப்பட்ட மற்றும் நம்பிக்கையான வழிகாட்டலுக்கான தேவை இலங்கையில் அதிகரித்துச் செல்வதை எடுத்துக்காட்டியுள்ளது. மேலும், மாணவர்களுக்கும், சர்வதேச கல்வி வழங்குநர்களுக்கும் இடையில் நேரடி ஈடுபாட்டின் மதிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

You may also like

Leave a Comment