இலங்கையின் முன்னணி போசணை உணவு நிறுவனமான Prima (பிறீமா), கனிஷ்ட நிலை கோல்ப் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கான தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்த வகையில், மிகவும் புகழ்பெற்ற கோல்ப் சம்பியன்ஷிப் தொடரான ‘Sri Lanka Junior Open’ (இலங்கை கனிஷ்ட திறந்த கோல்ப்) போட்டித் தொடருக்கு தொடர்ச்சியாக 17ஆவது ஆண்டாக பிறீமா நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது. இளம் திறமையாளர்களை வளர்ப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து, வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ‘Sri Lanka Junior Open Golf Championship 2025’ (இலங்கை கனிஷ்ட திறந்த கோல்ப் சம்பியன்ஷிப் 2025) போட்டித் தொடரில் மீண்டும் வெளிப்படவுள்ளது. டிட்வா சூறாவளி காரணமாக, 2025 டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய இந்தப் போட்டித் தொடரானது 2026 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பியன்ஷிப் போட்டித் தொடரானது, நுவரெலியா கோல்ப் கிளப்பில் (NEGC) 2026 மார்ச் 06 முதல் 08 வரை நடைபெறவுள்ளதுடன், மார்ச் 05 ஆம் திகதி பயிற்சிச் சுற்று திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் மு.ப. 7.30 மணிக்கு போட்டிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரானது 3 சுற்றுகளைக் கொண்ட ‘Gross’ போட்டித் தொடராக அமைகிறது. ஒவ்வொரு பிரிவிலும் மிகக் குறைந்த மொத்த புள்ளிகளைப் பெறும் வீரர் அப்பிரிவின் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்படுவார்.
Ceylon Agro Industries Ltd (Prima Group Sri Lanka) நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவிக்கையில்: “Sri Lanka Junior Open Golf Championship என்பது இலங்கையின் தேசிய தரவரிசைக்கான அளவுகோலாகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கை கோல்ப் நிறுவனத்துடன் கைகோர்ப்பதானது, Prima Group Sri Lanka நிறுவனத்திற்கு கிடைத்த பெரும் கௌரவமாகும். ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வரும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு வலுவூட்டுவதற்கும், அவர்களின் திறனை மேம்படுத்தி விளையாட்டில் சிறந்து விளங்க உதவுவதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்க எமது அனுசரணையானது உதவுகிறது என நாம் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.
கனிஷ்ட கோல்ப் விளையாட்டில் உலக அமெச்சூர் கோல்ப் தரவரிசைக்கான (WAGR) ஒரு அளவுகோலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள Sri Lanka Junior Open போட்டி, சிறுவர், சிறுமியர் ஆகிய இரு பிரிவுகளிலும் தேசிய ரீதியில் கனிஷ்ட வெற்றியாளர்களை உருவாக்குவதன் மூலம் பாலின சமத்துவ அங்கீகாரத்தை ஏற்படுத்துகிறது.
பிறீமா நிறுவனத்தின் நிலையான ஆதரவானது, இலங்கையின் கனிஷ்ட கோல்ப் களத்தை கணிசமான முறையில் வடிவமைத்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டில், அநுராதபுர அகடமியைச் சேர்ந்த ஆதித்யா வீரசிங்க மற்றும் லவிந்து பிரேமரத்ன ஆகிய இரு கனிஷ்ட வீரர்கள் உலக அமெச்சூர் கோல்ப் தரவரிசை அந்தஸ்தை பெற்றுள்ளனர். இவ்வீரர்கள், இத்தரவரிசையில் உள்ள ஏனைய கனிஷ்ட வீரர்களான ஜெவான் சதாசிவம், ரேஷன் அல்கம, கயா தலுவத்தே ஆகியோருடன் இணையவுள்ளனர். அத்துடன் லவிந்து பிரேமரத்ன, தேஜஸ் ரதிஸ்காந்த், உதீர பண்டார, ஜேக்கப் நோர்டன் ஆகியோரிடம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகின்றன. அவர்கள் இந்த ஆண்டு கனிஷ்ட திறந்த போட்டியின் வெற்றியாளருக்கான தங்கம் அல்லது வெள்ளி பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்புள்ளது என்பதானது, போட்டியை அதிக சவாலானதாக மாற்றும். வெண்கலம் மற்றும் செம்பு ஆகிய பிரிவுகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்தந்த பிரிவுகளில் வெற்றியாளர்களாவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பாரக்கப்படுகின்றது. தேஜஸ் ரதிஸ்காந்த், ஜனிஷ் வீரசிங்க, கெய்ட்லின் நோர்டன், சித்தாரா லோரன்ஸ், வெனுதி கீர்த்தனா, விஹாரா ஹேரத், துல்கினி கங்கார, பாத்திமா சீனியா, முஷ்பிரா முஸம்மில், யுவன் ரதிஸ்காந்த், திசுர பிரேமரத்ன, உசார நுகேகொட, அபிமன் வீரசிங்க, ஜேடன் சதாசிவம், அனன்யா கிரிஷாந்தன், ஹக்ஷரா பிரதீப் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கப் போட்டியிடுகின்ற ஒரு சில கனிஷ்ட வீர வீராங்கனைகளாவர்.
இது குறித்து, இலங்கை கோல்ப் சங்கத்தின் கடந்த ஆண்டின் தலைவர் ரணில் பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பிறீமா நிறுவனத்தின் இந்த நீடித்த கூட்டாண்மையை இலங்கை கோல்ப் (SLG) அமைப்பு வரவேற்பதுடன் நன்றிகளையும் தெரிவிக்க விரும்புகிறது. எமது தேசிய கோல்ப் நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்த நிகழ்வை மாற்றுவதில் பிறீமா நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இது இலங்கையின் இளம் கோல்ப் திறமையாளர்களை வெளிக் கொண்டுவருவதுடன், விளையாட்டின் மீதான பிறீமாவின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சான்றாகும்.”
பிரதான அனுசரணையாளர் எனும் வகையில், Prima Sunrise Bread ஆனது போட்டித் தொடர் முழுவதும் அனைத்து வீரர்களுக்கும் போசணை உணவுக்கான ஆதரவை வழங்குகின்றது. இந்த போட்டித் தொடர் மார்ச் 08 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவுடன் நிறைவடையவுள்ளது.
கனிஷ்ட பிரிவு மேம்பாட்டுக் குழுவின் தலைவர் கொமடோர் (Commodore) மங்கள மும்முல்லகே, பிறீமாவின் அனுசரணையின் பரந்த தாக்கத்தை சுட்டிக்காட்டினார். “ஒரு தசாப்தத்திற்கும் மேலாக Prima Sunrise இன் நிலையான அர்ப்பணிப்பானது, இலங்கையில் கனிஷ்ட பிரிவினருக்கான கோல்ப் சூழலை உருவாக்குவதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பங்கை ஆற்றியுள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவு, இளம் கோல்ப் வீரர்கள் தேசிய மட்டத்தில் சிறந்து விளங்குவதற்கும், படிப்படியாக தேசிய பிரதிநிதித்துவத்தை நோக்கி அவர்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த தளத்தை உருவாக்கியுள்ளது. இலங்கை கனிஷ்ட திறந்த போட்டி மற்றும் பிராந்திய கனிஷ்ட திறந்த போட்டிகளுக்கான அனுசரணை மூலம், Prima Sunrise வர்த்தகநாமமானது, தொடர்ச்சியான போட்டி அனுபவத்தை வழங்குவதிலும், திறமையாளர்களை அடையாளம் காண்பதிலும், கனிஷ்ட கோல்ப் வீரர்கள் விளையாட்டில் முன்னேறுவதற்கான பாதையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது.” என்றார்.
இலங்கை கனிஷ்ட திறந்த கோல்ப் சம்பியன்ஷிப் 2025 போட்டித் தொடரானது, வளர்ந்து வரும் திறமையாளர்கள், சர்வதேச நட்புறவு மற்றும் விளையாட்டின் மீதான பிறீமாவின் நீடித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒரு முக்கிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.
வயதுப் பிரிவு பிரிவுகள்:
திறந்த | தங்க பிரிவு – சிறுவர் மற்றும் சிறுமியர், 15 முதல் 18 வயது வரை
வெள்ளி பிரிவு – சிறுவர் மற்றும் சிறுமியர், 13 முதல் 14 வயது வரை
வெண்கல பிரிவு – சிறுவர் மற்றும் சிறுமியர், 11 முதல் 12 வயது வரை
செம்பு பிரிவு – சிறுவர் மற்றும் சிறுமியர், 10 வயது மற்றும் அதற்கு குறைந்தவர்கள்
