Home Financeசம்பத் வங்கியின் பெருநிறுவன மற்றும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர் (SME) துறையை மறுசீரமைக்க இன்டெலக்ட் நிறுவனத்தின் eMACH.ai தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது

சம்பத் வங்கியின் பெருநிறுவன மற்றும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர் (SME) துறையை மறுசீரமைக்க இன்டெலக்ட் நிறுவனத்தின் eMACH.ai தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது

by CeylonBusiness1
March 24, 2026 8:00 am/**/ 0 comment

என்டர்பிரைஸ் தரத்திலான நிதித் தொழில்நுட்பத்தில் (Fintech) உலகளாவிய முன்னணியில் உள்ள இன்டெலக்ட் டிசைன் ஆரெனா (Intellect Design Arena) நிறுவனம், இலங்கையை மையமாகக் கொண்டுள்ள சம்பத் வங்கி (Sampath Bank PLC) உடன் அதன் பெருநிறுவன மற்றும் SME வங்கிச் சூழலை eMACH.ai தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைப்பதற்காக ஒரு கூட்டணியை மேற்கொண்டுள்ளது.

இந்த கூட்டணி, பண முகாமைத்துவம், வணிக நிதி மற்றும் சப்ளை செயின் ஃபைனான்ஸ் (SCF) உள்ளிட்ட வங்கியின் விரிவான பரிவர்த்தனை வங்கிச் சூழலை நவீனமயமாக்க உதவுகிறது. இது டிஜிட்டல் சிறப்புத்தன்மை மற்றும் எதிர்காலத்திற்கான நிதிச் சேவைகளில் சம்பத் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்த பங்காளித்துவமானது, எதிர்காலத்திற்குத் தயாரான, அறிவார்ந்த டிஜிட்டல் வங்கி நிறுவனமாக சம்பத் வங்கியை மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய படியாகும். அத்துடன், உலகின் சிறந்த மாற்றியமைக்கக்கூடிய Composable Open Finance Platforms ஒன்றான eMACH.ai கட்டமைப்பின் மூலம் மாற்றங்களை வழங்குவதில் இன்டெலக்ட் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது.

இந்த மாற்றத்திற்கான பயணம் ஜனவரி மாதம் நடைடைபெற்ற உத்தியயோகபூர்வ ஆரம்ப விழாவுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் சம்பத் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சஞ்சய குணவர்தன மற்றும் Intellect Design Arena Ltd. நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரமணன் எஸ்.வி. உள்ளிட்ட இரு நிறுவனங்களின் உயர்மட்ட தலைவர்கள் கலந்துககொண்டனர்.

banner

இந்தத் திட்டம் பெருநிறுவன மற்றும் SME வங்கித் துறையில் நீண்டகால வணிகத் தாக்கம் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல், பகிரப்பட்ட தூரநநோக்கு, மூலலோபாயம் மற்றும் செயற்படுத்தல் குழுவை அடிப்படையாகக் கொண்டதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.

You may also like

Leave a Comment