Home FinanceSDB வங்கி தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகத்துடன் 2026ம் 1வது காலாண்டில் உறுதியான பெறுபேறுகளைப் பதிவாக்கியுள்ளது

SDB வங்கி தொடர்ச்சியான வளர்ச்சி உத்வேகத்துடன் 2026ம் 1வது காலாண்டில் உறுதியான பெறுபேறுகளைப் பதிவாக்கியுள்ளது

by CeylonBusiness1
June 22, 2026 10:45 am/**/ 0 comment

2026 மார்ச் 31ல் முடிவடைந்த முதலாவது காலாண்டில் உறுதியான நிதியியல் பெறுபேறுகளை SDB வங்கி பதிவாக்கியுள்ளது. அதன் பிரதான வணிகப் பிரிவுகள் மத்தியில் ஒழுக்கம்மிக்க நிதி நிர்வாகம், அறிவுபூர்வமான இடர் மேற்பார்வை மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்தியுள்ளதை இப்பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன.

2026ன் 1வது காலாண்டில் ரூபா 60 மில்லியன் என்ற வரிக்குப் பின்னரான இலாபத்தை வங்கி பதிவாக்கியுள்ளதுடன், 2025ம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7% அதிகரிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. மேம்பட்ட தொழிற்பாட்டுத் திறன், அறிவுபூர்வமான மூலோபாயத்திட்ட அமுலாக்கம், மற்றும் விவசாயம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவுகள், மற்றும் தனிநபர் போன்ற முக்கிய முக்கிய துறைகளில் வாடிக்கையாளர்களுக்கான முற்பணத்தில் வளர்ச்சி ஆகியன இப்பெறுபேறுகளுக்கு துணைபுரிந்துள்ளன. 

தேறிய கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் இக்காலாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் 29% அதிகரிப்புடன் ரூபா 152 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. அதன் நிதி ஒதுக்கீடு அற்ற வருமான மூலங்களை வலுப்படுத்துவதில் SDB வங்கியின் தொடர்ச்சியான வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது. மேம்பட்ட சேவை ஆற்றல்கள், அதிகரித்த அளவில் டிஜிட்டல் உள்வாங்கல், மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகள் ஆகியவற்றினூடாக வருமானத்தை பன்முகப்படுத்துவதில் வங்கி தற்போது மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கின்றது.  

இக்காலப்பகுதியில் வலுவான மூலதனம் மற்றும் நிதி நிலையையும் SDB வங்கி பேணியுள்ளது. வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதமானது குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைப்பாட்டையும் விட சிறப்பானதாக 15.15% ஆக காணப்பட்டது. புழக்க நிதிக் காப்பு விகிதம் 145.08% ஆகப் பேணப்பட்டுள்ளது. தேறிய நிலையான நிதி விகிதம் 136.97% ஆகக் காணப்பட்டுள்ளமை, எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதேசமயம், ஐந்தொகையின் வலிமையைப் பேணுவதில் வங்கியின் ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது.   

banner

SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரத்ன அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “வலுவான இடர் முகாமைத்துவம், தொழிற்பாட்டு ரீதியான கவனம், மற்றும் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பில் தெளிவான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எமது ஒழுக்கம் நிறைந்த வங்கிச்சேவை அணுகுமுறையின் பலத்தை 2026 முதலாவது காலாண்டில் நாம் பதிவாக்கியுள்ள பெறுபேறுகள் பிரதிபலிக்கின்றன. கட்டண அடிப்படையிலான வருமானம் எமது மூலதன மற்றும் நிதி நிலை மீள்திறன் ஆகியவற்றில் எமது தொடர்ச்சியான வளர்ச்சி எமக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கின்றது. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, இன்னும் மீள்திறன் கொண்ட, அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வங்கியாக எம்மைக் கட்டியெழுப்பும் அதேசமயம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவுகள், விவசாயம், தனிநபர் வாடிக்கையாளர்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் SDB வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தும்.”

சூழல் மீதான பொறுப்புணர்வு கொண்ட நிதி வழங்கல், அனைவரையும் அரவணைக்கும் வங்கிச்சேவை, பெண் தலைமைத்துவ தொழில் முயற்சிகள், மற்றும் கிராம மேம்பாடு ஆகியவற்றில் விசேட கவனத்துடன் நிலைபேற்றியல் சார்ந்த தனது முன்னுரிமைகளையும் இக்காலாண்டில் SDB வங்கி தொடர்ந்து மேம்படுத்தியுள்ளது. நாடளவில் 94 கிளைகளைக் கொண்ட வலையமைப்புடன், இலங்கையின் நீண்ட கால பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற நிதித் தீர்வுகளை வழங்குவதில் இவ்வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

SDB வங்கி தொடர்பான விபரங்கள்:

ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance – ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில்  மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

You may also like

Leave a Comment