அதன் சாதாரண வேர்களிலிருந்து சேவை சிறப்பை நோக்கிய இரண்டு தசாப்த கால வளர்ச்சி மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தும் வகையில், சியபத பினான்ஸ் பிஎல்சி, 13 பிராந்தியங்களில் 20 பாடசாலைகளில் நாடு முழுவதும் பாடசாலை மட்டத்தில் மரம் நடும் திட்டம் மற்றும் சித்திரப் போட்டியையும் நடத்தியது.
சியபத பினான்ஸ் சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர்கள், பிராந்திய முகாமையாளர்கள், கிளை முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்பு மற்றும் சியபத பினான்ஸ் சிரேஷ்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், நிதிச் சேவை துறையில் நிறுவனத்தின் 20 ஆண்டுகால பயணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக ஒவ்வொரு பாடசாலையும் 20 மீ மரங்களை (Mahua longifolia) நட்டனர்.
இந்தத் திட்டம் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்ன, “எங்கள் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், சுற்றுச்சூழலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தப் பாடசாலை மட்டத்திலான மரம் நடும் திட்டத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மரங்களும் இயற்கையும் அனைத்து உயிரினங்களின் உயிர்வாழ்விற்கு மையமானது மட்டுமல்லாது, நிலையான எதிர்காலத்திற்கும் இன்றியமையாதது என்பதை நாம் தொடர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் வெறும் மரங்களை நடுவதைத் தாண்டி – இது இளம் மனங்களை ஒன்றிணைத்து, இயற்கை நம் அனைவரின் வாழ்க்கையிலும் வைத்திருக்கும் சக்தியை ஏற்றுக்கொள்ள அவர்களை மேம்படுத்துவதாகும்.” எனக் கூறினார்.

“ஹரித அநாகதயக், திரசர ஹேடக்”, அதாவது “ பசுமையான எதிர்காலம் நிலையான நாளை’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்த கலைப் போட்டி, இளம் திறமையாளர்கள் படைப்பாற்றல் மூலம் இயற்கையுடனான தங்கள் தொடர்பை வெளிப்படுத்த ஒரு வழியை திறந்தது. ஒவ்வொரு பாடசாலையும் 20 வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் புத்தகப் பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியது.
சியபத பினான்ஸ் பிஎல்சி சிரேஷ்ட பிராந்திய முகாமையாளர் திரு. அமில பம்பராந்தகே குறிப்பிடுகையில், “முதலாவதாக, இந்த மைல்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகளை பங்குகொள்ள வைப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மர நடுகைத் திட்டம், இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தவும் வாய்ப்பளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் குளியாப்பிட்டிய இலுகேன குணானந்த மகா வித்தியாலயம்; களுத்துறை மகா வித்தியாலயம் ஸ்ரீ மேதங்கரா கனிஷ்ட பாடசாலை, யட்டியான, அகலவத்தை மாத்தறை அக்குரகொட சுல்தானகொட வித்தியாலயம் R/EMB/ மோதரவன பாடசாலை, எம்பிலிபிட்டிய் ஹேவாகம கனிது பாடசாலை ருக்மலே மகா வித்தியாலயம் மதிவெல ராகுல வித்தியாலயம், நுகேகொடை கரங்காவ ஜனராஜ்ய வித்தியாலயம், அம்பாறை ராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று விஜயபாகுபுர ஆரம்ப பாடசாலை, பொலன்னறுவை திருவையாறு மகா வித்தியாலயம், கிளிநொச்சி/கிளாவர்டன் தமிழ் வித்தியாலயம், ஹட்டன் நுவரெலியாவின் கிகிலியமன்ன வித்தியாலயம், இரத்னபுராவின் ஸ்ரீ பலபத்தல மகா வித்தியாலயம் , கேகாலையின் கந்துன கந்துரட்ட மகா வித்தியாலயம், பஸ்யால, ஜனாதிபதி மொடல் முன்பள்ளி , அனுராதபுரத்தின் ரன்பத்வில மகா வித்தியாலயம் / கஹடகஸ்டிகிலிய நிக்கவெரட்டியவின் விடிகுலிய மத்திய கல்லூரி மற்றும் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம்.
சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் ‘A(lka)’ என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.
